சிதம்பரம் திருப்புகழில் அகலிகை சாப விமோசன நிகழ்வு:

(கொள்ளை ஆசை என்று துவங்கும் தில்லைத் திருப்புகழில் இடம்பெறும் சில வரிகள்):
கல்லிலே பொற்றாள் படவேயது
நல்ல ரூபத்தேவர கானிடை
கெளவை தீரப் போகும்இராகவன் மருகோனே

கௌதம முனிவரின் சாபத்தால் கல்லாக மாறி துன்பமுற்றிருந்த அன்னை அகலிகை, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பொன் போலும் திருவடிகள் சிறிதே தீண்டப் பெற்ற நன்மையினால் சாப விமோசனமுற்று மீண்டும் தன் பண்டைய திவ்யத் திருமேனியோடு வெளிப்பட்ட அற்புத நிகழ்வினைப் போற்றுகின்றார் அருணகிரிப் பெருமான்.

No comments:

Post a Comment