ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி):

திருமாலின் 9ஆவது திருஅவதாரமாக ஸ்ரீகிருஷ்ணன், தற்பொழுது நடந்தேறி வரும் கலியுகத்தின் முந்தைய யுகமான துவாபர யுகத்தின் இறுதியில், (புதுதில்லியிலிருந்து சுமார் 170 கி.மீ தொலைவிலுள்ள) மதுரா நகரில் அவதரிக்கின்றான், இந்து தர்மம் போற்றும் ஏழு மோட்ச புரிகளுள் (ஸ்ரீகிருஷ்ண ஜன்ம பூமியான) மதுராவும் ஒன்று. கண்ணன் தன் அவதார நோக்கம் நிறைவுற்று மீண்டும் ஸ்ரீவைகுந்தம் திரும்பிய கணமே துவாபர யுகம் முடிவுற்றுக் கலியுகம் துவங்கப் பெறுகின்றது. கலியுகக் காலகட்டம் மொத்தம் 4,32,000 ஆண்டுகள், இந்நெடிய யுகக் கணக்கில் தற்பொழுது சுமார் 5100 ஆண்டுகளே கடந்துள்ளன (சிவ சிவ).

No comments:

Post a Comment