திருநீர்மலையில் ஒரு அற்புத தரிசனம்:

108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாகப் போற்றப் பெறுவது, திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது, அடிவாரக் கோயிலில் நீர்வண்ணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார், மற்றொரு தனிக்கோயில் போன்றதொரு அமைப்பில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அன்னை சீதை இலக்குவன் இருவருடனும் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றார், வால்மீகி முனிவர் அருள் பெற்றுள்ள ஆலயம். 
மலைக்கோயிலில் ரங்கநாதப் பெருமாள் எழுந்தருளியுள்ளார், ஆச்சரியமான (கிடந்த) திருக்கோலம். பிருகு மற்றும் மார்க்கண்டேய முனிவர் அருள் பெற்றுள்ளனர், மேலும் இக்கோயிலில் உலகளந்த பெருமாள் (நடந்த திருக்கோலம்) மற்றும் சாந்த நரசிம்ம மூர்த்தி (இருந்த திருக்கோலம்) ஆகியோர் எழுந்தருளி இருக்கின்றனர். இங்கிருந்து இப்பகுதி முழுவதையும் தரிசித்து மகிழலாம். 
திருமங்கை ஆழ்வார் இத்தலத்திற்கு வருகை புரிகையில், இத்தலம் முழுவதும் நீரினால் சூழப்பட்டிருக்க, நீர் வடியட்டும் என்று எதிரிலுள்ள மற்றொரு மலையில் 6 மாதங்கள் உறுதி மாறாத காதலுடன் காத்திருந்துப் பின்னர் பரந்தாமனின் 4 திருக்கோலங்களையும் தரிசித்து மகிழ்ந்துள்ளார், அவசியம் தரிசித்துப் போற்ற வேண்டிய திருத்தலம்.

No comments:

Post a Comment